ஒரு கல்லூரி நிகழ்ச்சியிலோ அல்லது விழாக்களிலோ பங்கேற்று மேடையில் பேசுவதற்கு சராசரியாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டால் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவிப்பது எஸ்.வி சேகரின் வழக்கமாகும். அவரது நண்பர் ஒருவரிடம் 1 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற காலண்டர்களை அச்சிட்டுள்ள எஸ்.வி சேகர், தன்னை இ.மெயில் மூலம் தொடர்பு கொண்டால் காலண்டரை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நித்தியானந்தா மீது பல வழக்குகளை போட்டு அகமதாபாத் மற்றும் பெங்களூரு காவல்துறையினரால் தேடப்படும் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கடந்த இரு தினங்களாக வீடியோ வெளியிட்டு வருகின்றார். பின்னர் தனக்கு மனைவி, குழந்தைகள் பேரன், பேத்தி இருப்பதால் கைலாசாவுக்கு தனியாக வந்து செல்வதாக உறுதி அளித்துள்ள எஸ்.வி.சேகர் தன்னை கைலாசாவுக்கு பிரதமர் ஆக்கினால் அவ்வப்போது வந்து செல்வேன் என்று நிபந்தனை விதித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நாம் கையால் தொடும் பொருளை பொறுத்து தான் நமது கை மனம் வீசுவதும், நாற்றம் வீசுவதும் என்று நித்தியானந்தா மீதான தனது பார்வை குறித்து விளக்கி உள்ளார். அதே நேரத்தில் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக பேச நான் பணம் ஏதும் வாங்கவில்லை என்று எஸ்.வி சேகர் கூறியிருப்பது குறிப்பிடதக்கது. நித்தியின் கைலாசா நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்கூட்டியே போட்டி போட்டுகொண்டு வேலைகள் நடந்து கொண்டிருக்க நித்தி எங்கு உள்ளார்? என்பதை வருகிற 18 ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கும், காவல்துறைக்கும் பெங்களூரு நீதிமன்றம் இறுதி கெடு விடுத்துள்ளது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…