தமிழ் மண்ணிலே தமிழ் புறக்கணிப்பா???திருவாரூரில் பற்றிய பொறிப்பு விவகாரம்.!

Published by
kavitha

 திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பொறியாளர் அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகையில் எழுதப் பட்டுள்ள சம்பவம் சர்ச்சையாகியது தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் தற்போது அளிக்கப்பட்டது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மொழி கொள்கை என்பதன் மூலமாக இந்தி மொழியை திணிக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்துவருகிறது. மேலும் மத்திய அரசு  நடைமுறைப்படுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தேசிய வங்கிகள், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் மாநில மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அண்மைக்காலமாகவே சர்ச்சை எழுந்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் 150 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் ரயில் நிலைய வளாகத்தில்  புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த முதல்நிலை பொறியாளர் அலுவலக கட்டிடத்தின் பெயர் பலகையில் தமிழ்மொழி இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு எழுத்தப்பட்டது.இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடும் எதிர்ப்பினால் இரவோடு இரவாக பெயர் பலகை முழுவதும்  சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சம்பவம் குறித்து உதவி கோட்ட பொறியாளரிடம் கேள்வி எழுப்பும்போது பெயிண்டர் வசதி இல்லை என்பதால் வேறு இடத்திலிருந்து பெயிண்டர் வர வழைத்து பெயர்பலகை எழுதப்பட்டது. அப்படி எழுதுகையில் இடம் இல்லாத காரணத்தினால் தான் தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. தமிழ்மொழி இல்லாதது குறித்து புகார் எழுந்ததல் முற்றிலுமாக பெயர் பலகை அழிக்கப்பட்டு தற்போது மீண்டும் புதியதாக மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகை எழுதப்படும் என்று தெரிவித்தார்.

 
Published by
kavitha

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

58 minutes ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

1 hour ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

2 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

3 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

4 hours ago