Minister Rajnath Singh speech [Image Source : ANI]
பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை.
சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வரும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி கூறுவோம். பிரதமர் மோடிக்கு திருக்குறள் வழிகாட்டும் நூலாக திகழ்கிறது.
தமிழகம் சிறந்த கலாச்சாரம் உடைய மாநிலம், சென்னையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய் என புகழாரம் சூட்டினார். மத்திய பாஜக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியா என்ன சொல்ல போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஊழல் செய்வதை இந்தியா முழுவதும் பார்க்கிறது. தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜவை ஆட்சியில் அமர்த்துங்கள், ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள். பாஜக வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது.
ஆனால், பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்க நடத்துகின்றன. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…