அனைத்து மொழிகளுக்கும் தமிழ் தான் தாய்மொழி – அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை.

சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வரும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி கூறுவோம். பிரதமர் மோடிக்கு திருக்குறள் வழிகாட்டும் நூலாக திகழ்கிறது.

தமிழகம் சிறந்த கலாச்சாரம் உடைய மாநிலம், சென்னையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய் என புகழாரம் சூட்டினார். மத்திய பாஜக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியா என்ன சொல்ல போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில்  திமுக அரசு ஊழல் செய்வதை இந்தியா முழுவதும் பார்க்கிறது. தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜவை ஆட்சியில் அமர்த்துங்கள், ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள். பாஜக வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது.

ஆனால், பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்க நடத்துகின்றன. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

49 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago