மணிப்பூர் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவ வேண்டும் – கமல்ஹாசன் கோரிக்கை!

Published by
கெளதம்

சென்னையில் லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில், மாணவர்களின் கேள்விகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் ஏராளமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் நான் வழங்கிய யோசனை என்ற பரபரப்பு தகவலை பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களுக்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து அவர் பேசுகையில், “வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம் அது வரும்போது வரட்டும்” நாம் அதை தேடகூடாது  என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், மணிப்பூர் மாணவர்களுக்கு கல்வியைத் தொடர தமிழ்நாடு உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசுகையில்,  இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சியைத் தொடர தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

இது நல்ல செயல், அப்படியே அமைச்சர் உதயநிதியின் தந்தையிடம் இன்னொரு கோரிக்கை உள்ளது. மணிப்பூரில் விளையாட்டு களம் நடக்கவில்லை போர்க்களம் நடக்கிறது. இதனால், மணிப்பூர் மாணவர்களின் கல்வியைத் தொடர தமிழ்நாடு உதவ வேண்டும். ஏன்னென்றால், கேரளா முதலவர் பினராயி விஜயன் அரசு மணிப்பூர் மாணவர்களுக்கு அதை செய்துள்ளது. இந்நிலையில், திராவிட அரசாக இதை செய்ய வேண்டும் என நேற்று கல்லூரி மாணவர்களிடையே பேசியபோது, மநீம தலைவர் கமல்ஹாசன் இந்த கோரிக்கையை முன்  வைத்தார்.

Published by
கெளதம்

Recent Posts

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

4 minutes ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

20 minutes ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

1 hour ago

“எப்ஸ்டீன் ஃபைல்களில் ட்ரம்ப் உள்ளார்” என பதிவிட்டதை நீக்கினார் எலான் மஸ்க்.!

வாசிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…

2 hours ago

அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,

ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு…

3 hours ago

“மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை விமர்சனம்.!

சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22…

3 hours ago