தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அளவில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 7,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4371 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று 92 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2051 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,54899 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 11,862 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 798 பேரில் ஆண்கள் 514 பேர், பெண்கள் 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா வார்டில் 5,895 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 97 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அங்கு மொத்த எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் மேலும் 90 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அளவில் கொரோனா பதிப்பில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. முதலிடம் மகாராஷ்டிராவில் 22171 பேரும், 2வது இடத்தில் குஜராத்தில் 8194 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…