டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை.. தானியங்கி இயந்திரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

டாஸ்மாக் கடையில் இயங்கும் தானியங்கி டாஸ்மாக் இயந்திரம் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் விளக்கம்.

சென்னை திருமங்கலத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு மீது குற்றச்சாட்டுகளை தேடி தேடி வைக்கின்றன. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது, திரித்து கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுள்ளன. மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.5, ரூ.10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.5.5 கோடி அபராதம் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது.

காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது. மாலில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் மது எடுக்க முடியாது. சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. ஏற்கனவே உள்ள மால் சாப்புகளில் மட்டுமே தானியங்கி மது வழங்கும் இயந்திரம் உள்ளன.

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் வழங்கும் வசதி எந்த இடத்திலும் இல்லை. வணிக வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எலைட் மதுபான கடைக்குள் மட்டுமே இயந்திரம் உள்ளது. எலைட் மதுபான கடையில் விற்பனையாளர் முன்னிலையில் மட்டுமே மதுபான தரும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை நடைமுறையில் உள்ளது. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என தானியங்கி டாஸ்மாக் இயந்திரம் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago