மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை கைவிடக்கோரி ஓசூரில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டிராக்டரில் பிரேமலதா ஊர்வலமாக வந்து, அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளார். பின் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் எனவும், தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓசூர் வரை வந்து விட்டோம், இன்னும் பெரும் படையாக திரட்டிப் பெங்களூருக்குள் நுழைய முடியும். ஆனால், நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன். தமிழ்நாடு மக்கள் காந்தியாக இருக்கவேண்டுமா, சுபாஷ் சந்திரபோஷாக இருக்க வேண்டுமா என கர்நாடகா தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைப்பதற்கு விட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடக மக்கள் மற்றும் தமிழக மக்களிடையே பிரிவினை இல்லை. அது போல தண்ணீரிலும் இந்த பிரிவினை வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் மத்தியில் ஆளும் பாஜக தான் கர்நாடகாவிலும் ஆட்சி செய்கிறது. எனவே மத்திய அரசு கர்நாடக அரசிடம் பேசி மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…