தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, கனிமொழி எம்.பி. ட்வீட்.
இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை, உழவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்து, எதிர்க்கால நலனை உறுதி செய்யும் திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத் திட்டத்தை உறுதி செய்தது, பனை மரங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திரு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், நெல் ஜெயராமன் மரபுசார் விதை பாதுகாப்பு இயக்கம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம், உழவர் சந்தைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துதல், சிறு தானியத் திட்டம் ஆகிய பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை சிறப்பாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…