தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, கனிமொழி எம்.பி. ட்வீட்.
இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை, உழவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்து, எதிர்க்கால நலனை உறுதி செய்யும் திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத் திட்டத்தை உறுதி செய்தது, பனை மரங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திரு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், நெல் ஜெயராமன் மரபுசார் விதை பாதுகாப்பு இயக்கம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம், உழவர் சந்தைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துதல், சிறு தானியத் திட்டம் ஆகிய பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை சிறப்பாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…