Tamilisai Soundararajan addressing voter list issue [file image]
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது.
இதனால் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என வாக்காளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்து இருக்கிறது. தேர்தலை சுமுகமாக முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஆனால், பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது என்பது வருத்தம் அளிக்கிறது.
தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது என்பது வேதனையான உண்மை. கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இன்னும் தீவிரமாக இதை கண்காணித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டாலும் அது ஜனநாயகத்தில் சரியில்லை என்பது தான் எங்களது வாதம். மேலும் இந்த விவகாரத்தில் திமுக அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…