நான் 5 முறை தோற்றத்துக்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த தமிழிசை!

Published by
பாலா கலியமூர்த்தி

Tamilisai Soundararajan: ஏன் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனது குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென் சென்னை தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன், தான் 5 முறை தேர்தலில் தோற்றத்துக்கான காரணத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது, தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால்தான் 5 முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன். இதனால் தேர்தலில் நிற்க பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தில் எதார்த்தமான உண்மை இருக்கிறது என தெரிவித்தார்.

என்னிடம் பணம் இல்லாததால் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழிசை இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே, தமிழிசை கூறியதாவது, பணம் கொடுத்துதான் தமிழகத்தில் பல இடங்களில் ஓட்டுகளை வாங்குகிறார்கள். இதனால் பணம் இல்லாததால் தான் நான் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனேன்.

தேசத்திற்கு பிரதமர் மோடி கேரண்டி, தென் சென்னைக்கு தமிழிசை அக்கா கேரண்டி. எப்படி ராமருக்கு அனுமரோ, அதுபோல பிரதமர் மோடிக்கு நாங்களெல்லாம் என்றும் தமிழிச்சி தங்கபாண்டியனும், ஜெயவர்தனும் தேர்தலுக்கு பிறகு முன்னாள் எம்பிக்களாகவே இருப்பார்கள் எனவும் விமர்சித்தார்.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

3 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

4 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

5 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

7 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

7 hours ago