TNGovt [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதில், பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கூடுதல் டிஐஜி வெங்கட்ராமன், சென்னை வடக்கு காவல் ஆணையர் அஸ்ரா கர்க், காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன், கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா, டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் உதவி ஆணையர் அனில்குமார், சூலூர், பீளமேடு ஆய்வாளர் மாதையன், அமுதா, மதுரை டிஎஸ்பி சரவணன், மாசார்பட்டி, மானாமதுரை, அரியலூர், திருப்பூர் ஆய்வாளர்கள் அனிதா, விஜயா, மகாலட்சுமி, சித்ராதேவி உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் மணிமேகலை, மறைந்த காவல் ஆய்வாளர் கு.சிவாவுக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 8 கிராம் எடையுடைய தங்கப்பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசு வழங்குகிறார் முதலமைச்சர்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…