வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரிய வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published by
Surya

 தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாடு தலங்கள் திறக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.இந்த சமயத்தில் தான் பள்ளிகள் கல்லூரிகள் ,ஆலயங்கள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது 3-வது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக மதுக்கடைகளை திறக்க ஒரு சில மாநில அரசுகள் முடிவு செய்தது.அதன்படி திறக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் மூடப்பட்டுள்ளது.  

 இதனிடையே தான் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அதாவது,சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில்,அத்தியாவசியமில்லாத டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கின் விசாரணை நடைபெற்றது.அப்பொழுது மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.அதாவது,  வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து மே 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் 18 தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம். 

 

 

Published by
Surya

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago