# மரியாதையாக நடத்துங்கள் # அதிகாரிகளுக்கு உத்தரவு!

சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகி உள்ள சம்பவம் ஆனது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்ற கூட்டத்தில் திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில், ‘புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்தக் கூடாது. போய்யா, வாய்யா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.பதியப்படும் வழக்குகளை சாதுரிய மாக கையாளப்பட வேண்டும் போன்ற அறிவுரை வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025