டாஸ்மாக் வழக்குகள்.! மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

Published by
Dinasuvadu desk

டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த இரு அமர்விலிருந்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு டாஸ்மாக் இயங்க அனுமதிகொடுத்ததன் மூலம் டெல்லி , கர்நாடகா போன்ற மாநிலங்களில் 40 நாள்களுக்கு பிறகு மதுப்பான கடைகள் திறக்கப்பட்டது.

பின்னர், தமிழகத்திலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை இயங்க நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது.

ஆனால்,  நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி  உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது.  அந்த  மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனை நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி வினித் கோத்தாரி,  நீதிபதி  புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய இரு அமர்விலிருந்து , தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட  மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

27 minutes ago

INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

1 hour ago

“என்னை கொல்ல முயற்சி” தீராத விளையாட்டுப் பிள்ளை நடிகை பகீர் புகார்!

மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…

2 hours ago

திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…

3 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…

3 hours ago

தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…

4 hours ago