[Representative image]
சென்னை, சேலம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மே 1ஆம் தேதியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட உள்ளன.
மே 1ஆம் தேதி உலகம் முழுக்க உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூட கோரி உத்தரவிட்டு வருகின்றனர்.
வழக்கமாக காந்தி ஜெயந்தி, முக்கிய திருவிழா உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு மதுபான கடைகள் மூடப்படுவது வழக்கம் அது போல தான் தற்போது உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, ஏற்க்கனவே, சேலம், தென்காசி,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் மூடப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில் தற்போது சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, வரும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் ஆகியவை திறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டு வருவதால் அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மே 1ஆம் தேதி இயங்காது என அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…