தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை உடேன மூட வேண்டும் -தேமுதிக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published by
Venu

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், கொரோனா முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை  நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ,துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

தீர்மானங்கள் விவரம் :

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

கொரோனா முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் ,மத்திய அரசு ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு அதன் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மத்திய ,மாநில அரசுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும் , முதல் தவணையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வாகன கட்டணம் என்பது சாலை வசதிகள் சீராக இருந்தால் தான் வசூலிக்க வேண்டும்.

அனைத்து ஆறு,ஏரி ,குளம் போன்றவைகளை தூர்வாரி மழை நீரை சேமிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக இந்த சாலைகளில் கவனம் செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

56 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago