தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி பொதுக் கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்கட்சி துணை பொது செயலாளர், தேமுதிகவின் கூட்டணி மற்றும் பிரசார வியூகம் குறித்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்றும் கூறினார்.
தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ள நிலையில், அதிமுகவினர் தங்களை இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…