பழைய இரும்பு கடையில் விற்கப்பட்ட பாடப்புத்தகங்கள்! மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கைது!

Published by
லீனா

பழைய இரும்பு கடையில் இலவச பாடப் புத்தகங்களை விற்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் முத்து வக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில்,  6 முதல் 12ம் வகுப்பு வரையிலான இலவச பாடப்புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்ததில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடபுத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. பழைய இரும்பு கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்ட நிலையில், பழைய இரும்பு கடையில் இலவச பாடப் புத்தகங்களை விற்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இரும்பு கடை உரிமையாளர் பெருமாளையும் போலீசார் கைது செய்து, மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Published by
லீனா
Tags: #Arrestbook

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

12 minutes ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago