ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த ஒரே அரசியல்வாதி தங்கமணி தான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங்கை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை.

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மின்துறை தொடர்பாக 12 கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினார். அதில், மின்சார சட்டத்தில் திருத்தும் கொண்டுவர முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து 237.63 லட்சம் டன் நிலக்கரி தமிழகத்திற்கு வர வேண்டும் எனவும் இடம்பெற்றுள்ளன.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் நிதி நிறுவனங்களிள் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.50% ஆக நிர்ணயிக்கவேண்டும். மத்திய அரசின் மின்விநியோக நிறுவன சேவை கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 1 பைசாவாக குறைக்க வலியுறுத்தியாக கூறினார்.

மேலும், மின்கட்டணம் அதிகரிக்கும் என வதந்தி பரப்புகிறார்கள், மக்கள் யாரும் அதை நம்பமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் கண்ணனுக்கு தெரியாமல் நிலக்கரி காணாமல் போயுள்ளது என குற்றசாட்டினார்.

இந்திய வரலாற்றில் ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள ஒரே அரசியல்வாதி என்ற பெருமையை முன்னாள் அமைச்சர் தங்கமணி பெற்றுள்ளார். கண் பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணனுக்கு தெரியாத கிரிப்டோ கரன்சி என்ற இரண்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய தங்கமணி, என் மீது குற்றசாட்டு கூறுகிறார் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி புரிதல் இல்லாமல் பேசி கொண்டியிருக்கிறார். கண்ணுக்கு தெரிந்த நிலக்கரிக்கும், கண்ணுக்கு தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி முதலில் பதில் சொல்லட்டும் என்றும் முதலில் கட்சிக்குள் அவர்கள் சுமுகமான முடிவு எடுக்கட்டும் என அதிமுக குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago