முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பல்வேறு பிரபலங்கள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவி செய்துள்ளனர்.
இதுவரையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிவாரண நிதியிலிருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக ரூ.50 கோடியம், ஆர்.டி.பி.சி.ஆர் ஹிட்களை வாங்க ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…