சிறையில் வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி – கே.சி. பழனிசாமி பேட்டி

Published by
Venu

சிறையில் வைத்த முதலமைச்சர்  பழனிசாமிக்கு நன்றி என்று அதிமுக முன்னாள் எம்.பி.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி.  ஆவார்.அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது  கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு இடையில் கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ,அதிமுகவின் இணையதளம் ,கொடி,லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை  தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்று அவர் மீது சூலூரைச் சேர்ந்த கந்தவேல் போலீசில் புகார் அளித்தார் .இந்தப் புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சூலூர் போலீசார் அவரை கைது செய்தது.மேலும் நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் கீழ் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் பின்பு கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன்  ஜர்படுத்தப்பட்டார்.அப்பொழுது , பழனிசாமியை   நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க ஆணை பிறப்பித்தார் .நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கு இடையில் சூலூர் நீதிமன்றத்தில்  ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.இதன் காரணமாக மனு மீதான விசாரணையை  பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம்.இதனை தொடர்ந்து  நடைபெற்ற விசாரணையில் ,நிபந்தனையின் பேரில் கே.சி.பழனிச்சாமிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.அதாவது சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கும் விதத்தில் செயல்பட கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இதனால் இன்று கே.சி.பழனிச்சாமி ஜாமீனில் விடுதலையானார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் கொள்கைகளுக்கு  சிறை வைக்கப்பட்டுள்ளது.என்னை சிறையில் வைக்கவில்லை.சிறையில் வைத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி.என்றுமே நான் என்னுடைய எண்ணங்கள் மற்றும் கொள்கைகளிள்    உறுதியாக இருப்பேன்.என்னை 100 முறை சிறையிலடைத்தாலும் எப்போதும் கொள்கையிலிருந்து விலகவே  மாட்டேன்.நான் என்னைக்குமே அதிமுக -வில் தான் இருப்பேன்.வேறு எந்த கட்சிக்கும் நான் செல்ல மாட்டேன் .கட்சியில் இருந்து என்னை நீக்கியதாக எந்த கடிதமும் வரவில்லை  என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

14 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

14 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

49 minutes ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

18 hours ago