குடியுரிமை திருத்த சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.இதன் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இந்த சட்டத்திற்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது திமுக அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதன்படி குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று ( ஜனவரி 24-ஆம் தேதி) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்துவது எந்த வகையில் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…