தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை என வானதி சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையிலுள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சி சார்பாக ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை. கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது . கட்சி பொறுப்பாளராக தான் கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கொங்குப் பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாசைகள் என பல ஆண்டு ஏக்கமாக உள்ள விஷயங்களை மாநில அரசு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதைப் பொறுத்தே கொங்குநாடு விவகாரத்தில் அடுத்த கட்ட பரிசீலனை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…