ஆவடி பகுதியில் மழைவெள்ளத்தை ஆய்வு செய்த போது, நகுல் என்ற சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை மழை நிவாரணமாக முதல்வரிடம் அளித்தார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை பெய்ய தொடங்கிய நாளில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய வருகிறார். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
அப்போது சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்பகுதி மக்கள் முதல்வருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, அப்பகுதியை சேர்ந்த நகுல் என்ற சிறுவன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை மழை நிவாரணமாக முதல்வரிடம் அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட முதல்வர் அதனை அமைச்சர் நாசரிடம் அளித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…