வேளாண் தனி பட்ஜெட் குறித்து அரசியல் கட்சியின் விவசாய அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என அமைச்சர் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் வரும் 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14ம் தேதி வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து விவசாய சங்கம், அரசியல் கட்சியின் விவசாய அணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் விவசாயிகள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய வகையில் பட்ஜெட் இருக்கும் எனவும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஆகவே, கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அம்சங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…