[File Image]
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் அதை காவிரியில் இருந்து பெற்று தருவது தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பணி. ஆனால், ஆணையம் இதை செய்யவில்லை என்பது தான் தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டு. எனவே, இந்த குற்றச்சாட்டுக்கு ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறந்து விட கோரும் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது. அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வில் நேற்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து நீதிபதிகள் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஆகஸ்ட் 28-ல் நடத்த வேண்டும். காவேரியில் தண்ணீர் திறப்பு, இரு மாநிலங்களின் கோரிக்கை, மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் ஆலோசித்து முடிவெடுத்து, அதன் விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு செப், 1ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…