இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரேவதி. பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் மீது நுண் உரம் செயலாக்க மையத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மக்கும் உரங்களையும், மக்காத உரங்களையும் பிரித்தெடுத்து அதனை இயந்திரத்தில் மாற்றி வேலை செய்து கொண்டிருந்த போது அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
உடனடியாக தஞ்சையிலுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களில் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலையில்லாமல் தனது இரண்டு குழந்தைகளுடன் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் , எனவே தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே தன்னை கருணை கொலை செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி மனு ஒன்றை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இவரது இந்த நிலையை கண்டு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…