TN Police - TNSTC [File Image]
சென்னை: கடந்த சில தினங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் இன்றுடன் நிறைவடைந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்தில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் காவலர் ஒருவர் சீருடையுடன் ஏறினார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். காவலர் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என நடத்துனர் அவரிடம் கூறியுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்கள் பஸ் நிறுத்தப்பட்டு பின்னர் ஒரு காவலர் சமாதானம் செய்து, காவலருக்கு டிக்கெட் எடுக்கப்பட்டு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.
காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து, அரசு பேருந்துகள் மீது போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கை சற்று கடுமையானது. அரசு பேருந்து எல்லை கோட்டை தாண்டி நிற்பது, நோ பார்க்கிங்கில் அரசு பேருந்து நிற்பது, ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை, அதிகளவு பயணிகள் ஏற்றி செல்கின்றனர் என பல்வேறு வழக்குகள் அரசு பேருந்துகள் மற்றும் ஓட்டுனர்கள் மீது பதியப்பட்டன.
தாம்பரம், சென்னை, நெல்லை என பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வந்தது. இதனை அடுத்து , இன்று சம்பந்தப்பட்ட இரு அரசு ஊழியர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி அதனை வீடியோவாக வெளியிட்டு இனி போக்குவரத்து துறையும், காவல்துறையும் சமாதானமாக செல்வோம் என கூறி இந்த இரு அரசு துறைகளுக்கு இடையேயான பிரச்னையை சரி செய்துள்ளனர்.
இருவரும் பேசி கொண்டதில், இருவரும் அவரவர் கருத்தை அன்று கூறினோம். பிறகு நீங்கள் (காவலர்) டிக்கெட் எடுத்து பயணித்தீர்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தவறாக பதியப்பட்டுவிட்டது. இனி இரு துறையும் சமாதானமாக அவரவர் துறை வேலைகளை செய்வோம் என பேசினர். அதே போல , கடந்த சில தினங்களாக அரசு பேருந்துகள் மீது போக்குவரத்துறை
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…