தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் வெற்றி -போஸ்டரால் பதவியேற்க தடை விதித்த நீதிமன்றம்!

Published by
கெளதம்
  • சிவகங்கையில் தேவி மாங்குடி  என்பவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர்  பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • இருவரும் வெற்றி பெற்றதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட பெரிய ஊராட்சியான சங்கராபுரத்தில் பெண்களுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடி என்பவர் அவரது மனைவியான தேவி மாங்குடியை வேட்பாளராக களமிறக்கினார் .இவருக்கு எதிராக அங்குள்ள தொழில் அதிபர் ஐயப்பன்  என்பவர் அவரது மனைவி பிரியதர்ஷினியை களமிறக்கினார்.

ஆனால் தேவி மாங்குடி வாக்கு எண்ணிக்கையில் 318 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றி பெற்ற சான்றிதலை வழங்கினார்.ஆனால் அதை ஏற்க மறுத்த வேட்பாளர் பிரியதர்ஷினி ஒரு பெட்டி வாக்கு எண்ணப்படவில்லை என்ற புகாரை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷயத்தை அறிந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்தியதில் பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

இதனை அடுத்து பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் அறிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினரும் வெற்றி பட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.இதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்று ஊர் மக்கள் குழப்பமடைந்தனர் .தற்போது இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ,தேவி மாங்குடி பதவியேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Published by
கெளதம்

Recent Posts

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

2 minutes ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

26 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

1 hour ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

2 hours ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago