3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் உள்ள நிலையில், அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் அருகே ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வலுவிழந்த புரெவி புயலானது , ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 40 கி.மீ. தூரத்திலும் பாம்பனுக்கு மேற்கு – தென்மேற்கு திசையில் 70 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.கன்னியாகுமரிக்கு வட கிழக்கில் 160 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து ராமநாதபுரம் மற்றும் அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டங்களை கடக்க வாய்ப்புள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் லட்சத்தீவில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு தமிழ்நாடு கடற்கரைக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…