மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு என தகவல் கூறப்படுகிறது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய நேரம் அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளி வளாகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…