கிருஷ்ணகிரியில், 3 மாத கர்ப்பிணியை மகளை, தந்தையே சுட்டுக் கொன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாதையன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு வயது 60. இவர் குடிவெறிதனத்தில் அவரது மனைவி மாதவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதை அதிகமான காரணத்தினால் தனது மனைவி மாதவியை சுட்டு கொள்ளப்போவதாக நாட்டு துப்பாக்கியை எடுத்து சுடுவதற்காக முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த அருணாச்சலத்தின் மகள் வெங்கடலட்சுமி இருவருக்குமிடையே குறுக்கே புகுந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருணாச்சலம் தனது மனைவியை சுடுவதற்காக சுட்ட போது வெங்கடலட்சுமியின் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
திருமணமான வெங்கடலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அருணாச்சலத்தை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…