முதல் முறையாக மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதாக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று,கடந்த மாதம் முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.
இந்நிலையில்,மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அப்பகுதி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும்,இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…