முதல் முறையாக மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதாக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று,கடந்த மாதம் முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.
இந்நிலையில்,மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அப்பகுதி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும்,இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…