பிரபல ரவுடியின் கழுத்தை அறுத்து கொண்ட கிருஷ்ணாவை என்கவுண்டரில் சுட்டு கொன்ற போலீசார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான வீரா என்பவர் நேற்று அவரது வீட்டின் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. சுற்றி வளைத்த கும்பல் அவரின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்துச் சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கழுத்தில்லாமல் இருந்த வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வீராவின் தலை எங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் நேற்று இரவு முதலே காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இந்த கொடூர கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி வந்தனர்.
இதனையடுத்து, புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் குற்றவாளிகள் 7 பேர் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் கிருஷ்ணா என்பவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இதனையடுத்து அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், கிருஷ்ணாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணாவுக்கும் வீராவிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் இந்த கொடூரக்கொலை நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…