அரசு பங்களாவை காலி செய்து புதிய வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ்.
அதிமுக அரசு 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்களுக்கு, அவர்கள் வசிப்பதற்காக அரசு பங்களா வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அரசு பங்களாவை அங்கிருந்தவர்கள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு பங்களாவிலேயே தங்குவதற்கு அனுமதி கோரிய நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அவரது தம்பி மறைவின் காரணமாக அந்த இல்லத்தை முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில் நல்ல நாளான இன்றைய நாளில் இன்றைய தினம் அரசு பங்களாவை காலி செய்து விட்டு, சென்னையில் உள்ள புது வீட்டுக்கு மாறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வசித்து வந்த வீடு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…