தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…