நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அனுமதியுடன் நடைபெற்ற திருமணம்…!

Published by
லீனா

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அனுமதியுடன் நடைபெற்ற திருமணம். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு, வடக்குப்பட்டி  கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் அதே கிராமத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்த இளைஞர் கஸ்தூரியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் ராம்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய மறுத்ததால் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் கஸ்தூரியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பிணை பெற்று வெளியே வந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாததால் அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்று இவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்த ராம்கி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக நீதிபதியிடம் உறுதியளித்தார். அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் அனுமதியுடன் வழக்கறிஞர்களும் முன்னிலையில் விநாயகர் கோவிலில் ராம்கி மற்றும் கஸ்தூரிக்கு திருமணம் நடைபெற்றது.

ராம்கி திருமணம் செய்து கொண்டாலும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா சாடல்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா சாடல்!

சென்னை : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா (வி.கே.சசிகலா) நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…

17 minutes ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

45 minutes ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

1 hour ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

1 hour ago

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

13 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

13 hours ago