பேஸ் புக் பக்கத்திலிருந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து “விலைமாது” என பதிவிட்ட நபர் கைது!

Published by
Rebekal

பேஸ் புக் பக்கத்திலிருந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து “விலைமாது” என பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் தற்பொழுது மிக பிரபலமான ஒரு சமூக வலைதளம் ஆக இருந்தாலும், இதன் மூலம் பலர் உயிர் இழக்கவும் செய்கின்றனர். காரணம் நாம் அறிந்ததுதான் பெண்கள் தங்களது புகைப்படத்தை பதிவிடுவதை சில ஆண்கள் தவறான முறையில் எடுத்து பயன்படுத்தும் பொழுது அவமானம் தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்கின்றனர். சிலர் மட்டுமே குடும்பத்தினர் உதவியுடன் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் முகநூலில் பெண் ஒருவரது புகைப்படத்தை பதிவிட்டு விலைமாது என சித்தரித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக மணப்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சரத் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விலை மாது என சித்தரிக்கப்பட்டுள்ள தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குடும்பதின்மரிடம் கூறியுள்ளார். மேலும், புகைப்படத்துக்கு கீழே ஒரு வங்கிக் கணக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பெண் விலை மாது என குறிப்பிட்டு அவர்களை விரும்புபவர்கள் பணத்தை இந்த வங்கி கணக்கு அனுப்ப வேண்டும் என்றவாறு சரத்குமார் தொழில் செய்து வந்துள்ளார்கள். இவ்வாறு பலரிடம் மோசடி செய்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் தனது கணவருடன் இணைந்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகார் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டு, சரத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தான் பெண்கள் தங்கள் புகைப்படத்தை இணையதள பக்கங்களில் போட கூடாது என்று சொல்வதை விட்டு விட்டு, உனது அம்மாவும் அக்காவும், மனைவியும் பெண்கள் தான் என சொல்லி ஆண்களை வளர்க்க வேண்டும்.
Published by
Rebekal

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

5 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

6 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago