காதலித்த பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்த காவலர்..! தாலி கட்ட வைத்த பெண் காவலர்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அடுத்து பாண்டுரங்கன் தொட்டியை சார்ந்தவர் கண்ணன்.இவர் மோப்பநாய் பிரிவில் வேலை செய்து வருகிறார்.இவரது உறவினர் பெண் நதியா.இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருகிறார்.
நதியா ,கண்ணன் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர்.இந்நிலையில் நதியவை கண்ணன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் தான் ஏமாந்து விட்டதாக கூறி நதியா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார்.
நதியாவை மீட்ட அவரது உறவினர்கள் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவல் அறிந்த தேன்கனிகோட்டை டிஎஸ்பி சங்கீதா விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து கண்ணன் நதியாவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து இருவரும் தேன்கனிகோட்டை நரசிம்ம சுவாமி கோவிலில் காவலர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025