ஆவின் பால் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் 5 லிட்டர் கொண்ட பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுவரை  ரூ.210க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் இன்று முதல் ரூ.220ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே பால் முகவர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பால் கொள்முதல் பால் உற்பத்தியாளர்கள் உயர்த்தக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான் 5 லிட்டர் கொண்ட பச்சை நிற நிலப்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ கடைகள், தேநீர் விடுதிகள் மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காப்பி போன்றவற்றிக்கு பயன்படுத்தக்கூடிய இந்த 5 லிட்டர் பால் விலை உயர்வால், டீ மற்றும் காப்பி உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான விலையும் உயரக்கூடும் என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, ஆவின் பால் உள்ளிட்ட பொருட்கள் மீதான விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது பால் மட்டுமே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர என அனைத்து தரப்பினர்களுக்கும் பால் ஒரு அத்தியாவசிய உணவு பொருட்களில் ஒன்றாகும். தற்போது இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

47 minutes ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

2 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

2 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

3 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

3 hours ago

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

10 hours ago