2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை சுருக்கமுறை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு நேற்று தெரிவித்தார்.2022 ஜனவரி முதல் நாளை(1 ஆம் தேதி) தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது.
ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள்.3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள் உள்ளன.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தும் மேற்கொள்ளவதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது.இதில் புதிதாக பெயர் சேர்க்க,நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் முழுவதுமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.
அதன்படி,இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.மேலும்,தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/index.html இணையதளப் பக்கத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…