திருவெறும்பூரில் இரண்டாவது நாளாக வெறிச்சோடிய டாஸ்மாக்.!

Published by
Dinasuvadu desk

திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.  40 நாள்களுக்கு பிறகு டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.

மேலும், மது பிரியர்கள் தனிமனித இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்பட்டது.  சில மாவட்டங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கூடை உடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் என்றும், சில மாவட்டங்களில் ஆதார் அட்டை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் இயங்கும் ஒரு டாஸ்மாக் கடையில் இரண்டாவது நாட்களாக என்றும் ஆட்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

13 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago