“டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சேவைகள்,மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும்” – ஓபிஎஸ் வாழ்த்து..!

Published by
Edison

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாளான இன்று அவரது சேவைகள்,மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும் என்று ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பத்திரிகை,விளையாட்டு,கல்வி, ஆன்மிகம் என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவரான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும்,அவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்த நிலையில்,வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், அவரது 86-வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி அமைப்பாளருமான கனிமொழி,சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில்,டாக்டர் ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாளான இன்று அவரது சேவைகள்,மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இனிய தமிழை எளிய முறையில் பொதுமக்களுக்கு வழங்குகின்ற தினத்தந்தி மற்றும் மாலை மலர் நாளிதழ்களின் உரிமையாளராக இருந்தவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள். ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்தவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 86-வது பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும், மரியாதையினையும் .சிவந்தி தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் ஆதித்தனார் அவர்களின் சாதனைகள், சேவைகள் என்றென்றும் மக்கள் மனதில் நிச்சயம் நிலைத்து நிற்கும்,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

7 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

8 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

8 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

9 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

10 hours ago