இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்! வாபஸ் பெறப்படுகிறது-ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published by
Venu

இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த கருத்தை  எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.இதனை அடுத்து அழைப்பை ஏற்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்  மு.க.ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்படுகிறது .ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் விளக்கத்தை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம்.மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.மேலும் இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

1 hour ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

1 hour ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

2 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

3 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

3 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

4 hours ago