தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து,கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையான 2,000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக,குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும்,14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும்,ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் அட்டை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,கொரோனா நிவாரண தொகையில் இரண்டாம் தவணையான 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்களானது வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
இந்த டோக்கன்களின் அடிப்படையில்,2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15-6-2021 முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…