சென்னையில் உள்ள தரமணி என்ற பகுதியை சேர்ந்தவர், ராஜா மொயிதீன். இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பாலவாக்கத்தில் கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த மூன்றாம் தேதி அவரது குடும்பத்தினருடன் கோவளத்திற்கு சென்றார். மாலை வீடு திரும்பிய அவர், தனது வீட்டு கதவு திறந்தே இருப்பதை கண்டு அதிர்ந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த பொது, அவர் பீரோவில் இருந்த 14 லட்ச ரூபாய் பணமும், 9 சவரன் நகையும் காணவில்லை.
இதனையடுத்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வுகளை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் மூலம், மொய்தினிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்த சையது என்பவர் அவர் வீட்டில் உள்ள நகைகளை திருடியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பதுங்கி இருந்த சையது, மற்றும் அவரின் தம்பி அப்துல்லா மற்றும் அவரது நண்பர் முகமது ஆசிப் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பணத்தையும் நகையையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…