மகிழ்ச்சி…இனி இவர்களுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சம் – ரூ.12 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டு வரும் தீருதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளுள் விதி எண்.110-இன்கீழ், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு,85,000 ரூபாயிலிருந்து 8,25,000 ரூபாய் வரை தற்போது வழங்கப்பட்டு வரும் தீருதவித் தொகை, இனி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயாகவும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச தொகையான ரூ.85,000-ஐ ஒரு இலட்சமாகவும், அதிகபட்ச தொகையான ரூ.8,25,000-ஐ ரூ.12 இலட்சமாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Recent Posts

வயநாடு : தொடரும் கனமழை…முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…

2 minutes ago

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

26 minutes ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

49 minutes ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

1 hour ago

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

1 hour ago

நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

1 hour ago