குன்றத்தூர் வட்டாட்சியரான ஜெயசித்ரா கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலவரிடமிருந்து விருது பெற்றதை கொண்டாடும் விதமாக சக பணியாளர்களுக்கு அரசு அனுமதி இன்றி கறி விருந்து வைத்ததால் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் பகுதியின் வட்டாட்சியராக செயல்பட்டு வரும் ஜெயசித்ரா முதலவரிடமிருந்து விருதை பெற்றார் . இதனை கொண்டாடும் விதமாக தாசில்தார் ஜெயசித்ரா குன்றத்தூர் பகுதியில் பணியாற்றி வரும் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து வைத்துள்ளார்.
தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பொது விழாக்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில் விதிகளை மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதற்காக வட்டாட்சியர் ஜெயசித்ராவை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிற்ப்பு விருது பெற்ற ஜெயசித்ரா மக்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…