புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் தொடர்ந்து 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வாய்க்காலின் அருகே உள்ள வீட்டில் ஹசீனா பேகம் என்ற பெண் ஒருவர் வசித்து வந்தார்.
தற்பொழுது புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அவரின் ஸ்கூட்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைமீட்பதற்காக சென்றபோது அவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் அடித்து சென்ற அந்த பெண்ணனை மீட்பதற்காக பொதுமக்கள் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
தண்ணீர் வடிந்தவுடன் தேடியபோது அவரின் ஸ்கூட்டர் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த பெண்ணை காணவில்லை. இதனைதொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் போலீசார், அந்த பெண்ணை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த 6 மணிநேரம் பெய்த கனமழையால் இதுவரை 3 பேர் காணாமல்போனது, குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…