ஹீட்டர் தண்ணீர் சூடாகிவிட்டதா என தொட்டு பார்த்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை , அம்மணி தோட்டம் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரின் மகள் தான் அனிதா. 20 வயதாகும் இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நேற்று காலை அவரது தாயார் தேனீர் வாங்க கடைக்கு சென்றபோது அனிதா தான் குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டு தண்ணீர் வைத்துள்ளார். அதன்பின் அந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை அறிவதற்காக தண்ணீரைத் தொட்டு பார்த்துள்ளார். அப்பொழுது ஹீட்டரில் இருந்து வந்த மின்சாரத்தால் திடீரென அவர் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே விழுந்து பலியாகியுள்ளார். வீட்டிற்கு வந்த தாயார் மகள் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
அதன்பின் அங்கு வந்த காவல்துறையினர் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும், ஹீடர் போன்ற பொருட்களை கையாளும் பொழுது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அது போல ஹீட்டரை வைத்துவிட்டு அது தண்ணீருக்குள் இருக்கும் பொழுது அதைத் தொட கூடாது எனவும் காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…